spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுமதுரை ரயில் தீ விபத்து- சுற்றுலா நிறுவன ஊழியர்கள் 5 பேரிடம் விசாரணை

மதுரை ரயில் தீ விபத்து- சுற்றுலா நிறுவன ஊழியர்கள் 5 பேரிடம் விசாரணை

-

- Advertisement -

மதுரை ரயில் தீ விபத்து- சுற்றுலா நிறுவன ஊழியர்கள் 5 பேரிடம் விசாரணை

மதுரை ரயில் தீ விபத்தில் சுற்றுலா நிறுவன ஊழியர்கள் ஐவரிடம் மதுரை ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

"ரயில் தீ விபத்து நேர்ந்தது எப்படி?"- விரிவான தகவல்!
Video Crop Image

உத்திர பிரதேச மாநில லக்னோ மாவட்டத்தில் இருந்து கடந்த 17-ஆம் தேதி ஆன்மீக சுற்றுலா செல்வதற்காக கிளம்பிய பயணிகள் விஜயவாடா சென்னை திண்டுக்கல் கன்னியாகுமரி நாகர்கோவில் சென்று இறுதியாக நேற்று காலை நான்கு மணி அளவில் மதுரை வந்து அடைந்தனர். மதுரையில் ரயில்வே நிலையம் அருகே சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் இருப்பு பாதையில் ரயில் நிறுத்தப்பட்டிருந்தது அப்பொழுது அதிகாலை நேரம் என்பதால் டி போடுவதற்காக சமையல் எரிவாயு பத்த வைக்கப்பட்டுள்ளது சமையல் எரிவாயுவல் ஏற்பட்ட கசிவின் காரணமாக சமையல் எரிவாயு வெடித்து தீ விபத்து நடந்தது. இதில் ஒன்பது நபர்கள் ரயில் பெட்டிக்குள் எரிந்து உயிரிழந்தனர்.

காயமடைந்த ஏழு நபர்கள் அருகில் உள்ள ரயில்வே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டர் மீதமுள்ளவர்கள் ரயில்வே நிர்வாகம் பாதுகாப்பாக தங்க வைத்திருந்தது. இதில் பிரேத பரிசோதனை முடிந்து 9 பேர் உடலும் சொந்த மாநிலத்திற்கு நேற்று இரவு அனுப்பி வைக்கப்பட்டது. மீதம் காயமடைந்தவர்கள் மற்றும் தங்க வைக்கப்பட்டிருந்தவர்கள் அனைவரும் இன்று விமானம் மூலம் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

we-r-hiring
ரயில் பெட்டிகளில் பயங்கர தீ விபத்து- 6 பேர் உயிரிழப்பு!
Video Crop Image

இந்நிலையில் இந்த பயணிகள் வந்த ரயில் பெட்டியில் சுற்றுலா நிறுவன ஊழியர்களும் வந்துள்ளனர் அவர்கள் நேற்று சம்பவம் நடந்த போது தப்பி ஓடி விட்டதாக தகவல் வந்தது. அவர்களின் தொலைபேசி எண்ணை வைத்து தொடர்பு கொண்டு மதுரை ரயில்வே போலீசார் நேற்று இரவு அவர்களை பிடித்து விசாரணை செய்து வருகின்றனர். இதில் ஐந்து நபர்கள் அந்த நிறுவனத்தின் ஊழியர்கள் என முதற்கட்ட தகவல் தெரிய வருகிறது இன்று மதுரை தென்னக ரயில்வே பாதுகாப்பு ஆணையர் சவுத்ரி விசாரணை செய்தபோது அதில் இருவரை ரயில்வே காவல்துறையினர் விசாரணைக்காக அழைத்து வந்தனர். இந்த ரயில் விபத்தில் இவர்கள் மீது குற்றச்சாட்டு நிரூபிக்கப்படும் அச்சத்தில், இவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும். தவறு இல்லாத பட்சத்தில் இவர்களும் திரும்ப அனுப்பப்படுவார்கள் என ரயில்வே போலீசார் தகவல் தெரிவித்தனர்.

MUST READ