Homeசெய்திகள்தமிழ்நாடுமார்க்கெட் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் தீ!

மார்க்கெட் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் தீ!

-

 

மார்க்கெட் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் தீ!
Video Crop Image

கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

4 ஆண்டுகளுக்கு பின் பாகிஸ்தான் திரும்பினார் நவாஸ் ஷெரீப்!

ஆயுதபூஜை மற்றும் விஜயதசமியையொட்டி, பூ மற்றும் பழம் வாங்க ஏராளமான மக்கள் சென்னை கோயம்பேடு சந்தைக்கு வந்திருந்தனர். இந்த நிலையில், சென்னை சேப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த இளவரசன் என்பவர், தனது காரை நிறுத்தி விட்டு, பழம் வாங்க சந்தைக்குள் சென்றுள்ளார். அப்போது, எதிர்பாராத விதமாக, அவரது காரின் முன்பகுதியில் தீப்பிடித்துள்ளது.

ஹமாஸ் குழுவினரை அழிக்க சிறப்புப் படையை உருவாக்கிய இஸ்ரேல்!

தீ மளமளவென கார் முழுவதும் பரவியதைத் தொடர்ந்து, காரின் டயர்கள் பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறினர். பின்னர், தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர், தண்ணீரைப் பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பதற்றமான சூழல் ஏற்பட்டது.

MUST READ