- Advertisement -
மதுரை மாசி வீதிகளில் எழுந்தருளிய மீனாட்சி, சுந்தரேஸ்வரர்
மதுரை மாசி வீதிகளில் வளம் வந்த மீனாட்சி மற்றும் சுந்தரேஸ்வரரை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
சித்திரை திருவிழாவில் தங்க வாகனத்தில் சுந்தரேஸ்வரரும், ரிஷப வாகனத்தில் மீனாட்சி அம்மனும் சிறப்பு அலங்காரத்தில் தோன்றினர். மீனாட்சி வேடம் அணிந்த சிறுவர் சிறுமிகளும் மாசி வீதிகளில் ஊர்வலமாக சென்றனர்.

மாசி வீதிகளில் பக்தர்கள் வெள்ளத்திற்கு இடையே வீதி உலா வந்த சுவாமிகளை மக்கள் தரிசனம் செய்தனர். சித்திரை திருவிழாவை முன்னிட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையே சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் ஆற்றல் இறங்கும் நிகழ்வு வரும் 5 ஆம் தேதி நடைபெற உள்ளதால் வைகை ஆற்றில் தண்ணீரையை திறந்து விட தமிழ்நாடு அரசு உத்தரவைத்துள்ளது. அதற்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.