Homeசெய்திகள்தமிழ்நாடுநாளை சனிக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயங்கும்!

நாளை சனிக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயங்கும்!

-

 

நாளை (மே 01) அரசு விடுமுறை தினம் என்பதால் சனிக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

‘தொடர்ந்து 80 முறை நிகழ்ந்த நில அதிர்வுகள்- மக்கள் அச்சம்!

இது குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “நாளை (மே 01) சர்வதேச தொழிலாளர்கள் தினம் என்பதால், நாளைய தினம் மெட்ரோ ரயில்கள் சனிக்கிழமை அட்டவணை படி இயக்கப்படும். காலை 05.00 மணி முதல் இரவு 11.00 மணி வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். காலை 08.00 மணி முதல் நண்பகல் 11.00 மணி வரையும், மாலை 05.00 மணி முதல் இரவு 08.00 மணி வரையும் 6 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் அரிதான பக்கவிளைவு!

இரவு 08.00 மணி முதல் நள்ளிரவு 10.00 மணி வரை 7 நிமிட இடைவெளியிலும், இரவு 10.00 மணி முதல் இரவு 11.00 மணி வரை 15 நிமிட இடைவெளியிலும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ