Homeசெய்திகள்தமிழ்நாடுமெட்ரோ ரயில் நிலையங்களில் வாட்ஸ் அப் மூலம் QR பயணச்சீட்டு பெறுவதற்கான புதிய வசதி அறிமுகம்!

மெட்ரோ ரயில் நிலையங்களில் வாட்ஸ் அப் மூலம் QR பயணச்சீட்டு பெறுவதற்கான புதிய வசதி அறிமுகம்!

-

- Advertisement -

 

https://www.apcnewstamil.com/news/tamilnadu-news/direct-procurement-centers-should-be-opened-immediately/65168

சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ள பயணச்சீட்டு விற்பனை செய்யும் கவுண்டர்களில் வாட்ஸ் அப் மூலம் QR பயணச்சீட்டு பெறுவதற்கான புதிய வசதியை மெட்ரோ ரயில் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

மாணவர்களின் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்ட எம்.எல்.ஏ.!

சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ள பயணச்சீட்டு விற்பனை செய்யும் கவுண்டர்களில் பயணச்சீட்டு வாங்கும் பயணிகள், மின்னணு பயணச்சீட்டுகள் பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் விதமாக கவுண்டர்களில் வாட்ஸ் அப் மூலம் QR பயணச்சீட்டு பெறுவதற்கான புதிய வசதியை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் சித்திக் இ.ஆ.ப., கிண்டி மெட்ரோ ரயில் நிலையத்தில் இன்று (ஜன.24) அறிமுகப்படுத்தினார். இந்நிகழ்ச்சியில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இயக்குநர் ராஜேஷ் சதுர்வேதி (அமைப்புகள் மற்றும் இயக்கம்), ஆலோசகர் மனோகரன் (தானியங்கி கட்டண வசூல் அமைப்பு மற்றும் தொழில்நுட்பம்), சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உடனிருந்தனர்.

இந்நிகழ்வின் போது, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் சித்திக் இ.ஆ.ப., செய்தியாளர்களிடம் கூறியதாவது, “சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், மெட்ரோ ரயில் பயணிகள் எளிய வகையில் பயணச்சீட்டுகளை பெறுவதற்காகவும், காகித பயன்பாட்டைக் குறைத்து பசுமையான சூழலை மேம்படுத்துவதற்கான முயற்சியாகவும், டிஜிட்டல் முறைகளை ஊக்குவிப்பதற்காகவும், மெட்ரோ ரயில்நிலையங்களில் உள்ள QR குறியீடுகளை ஸ்கேன் செய்து டிஜிட்டல் QR பயணச்சீட்டுகளை பெறுதல், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மொபைல் ஆப் மூலம் QR பயணச்சீட்டுகளை பெறுதல், WhatsApp, Paytm, PhonePe மூலம் QR பயணச்சீட்டுகளை பெறுதல் என பல்வேறு வசதிகளைஅறிமுகப்படுத்தியுள்ளது.

இதன் தொடர்ச்சியாக, மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ள பயணச்சீட்டு விற்பனை செய்யும்கவுண்டர்களில் வாட்ஸ் அப் மூலம் QR பயணச்சீட்டு பெறுவதற்கான புதிய வசதியை கோயம்பேடு மற்றும்விமான நிலையம் ஆகிய 2 மெட்ரோ ரயில் நிலையங்களில் முதலில் முயற்சிக்கப்பட்டு, இது பயணிகளின் இடையில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதால் தற்போது 41 மெட்ரோ ரயில் நிலையங்களிலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

“நேரடி கொள்முதல் நிலையங்களை உடனடியாக திறக்க வேண்டும்”- அன்புமணி ராமதாஸ் எம்.பி. வலியுறுத்தல்!

இந்த அமைப்பில், பயணிகள் தங்கள் மொபைல் எண்ணை கவுண்டரில் உள்ளிடுவதற்கான வசதிஅமைக்கப்பட்டுள்ளது. பயணிகள் மொபைல் எண்ணை உள்ளிட்டதும், வாட்ஸ் அப் மூலம் பயணச்சீட்டு நேரடியாக அவர்களது மொபைலுக்கு அனுப்பபடும். “பரிவர்த்தனை பாதுகாப்பானது, பயணிகளின் செல்போன் எண்கள் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் அமைப்பில் சேமிக்கப்படவில்லை, பயணிகளின் தனியுரிமை உறுதிச் செய்யப்படுகிறது” எனத் தெரிவித்துள்ளார்.

MUST READ