Homeசெய்திகள்தமிழ்நாடுபாஜக கூட்டணியில் இருக்க கூடாது என்பதை உணர்ந்து தான் அதிமுக முடிவு- துரைமுருகன்

பாஜக கூட்டணியில் இருக்க கூடாது என்பதை உணர்ந்து தான் அதிமுக முடிவு- துரைமுருகன்

-

பாஜக கூட்டணியில் இருக்க கூடாது என்பதை உணர்ந்து தான் அதிமுக முடிவு- துரைமுருகன்

அதிமுக – பாஜக விவகாரத்தில் தலையிட்டு கருத்து கூற விரும்பவில்லை என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

Duraimurugan tn assembly

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் துரைமுருகன், “காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை கர்நாடகா பின்பற்ற வேண்டும். உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி நிலுவையில் உள்ள நீரை கர்நாடகா திறந்துவிட வேண்டும், உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, கர்நாடகா தண்ணீரை தந்து கொண்டிருக்கிறது. உச்சநீதிமன்ற தீர்ப்பையே கடைசி தீர்ப்பாக எடுத்துக் கொள்ள வேண்டும். தமிழ்நாட்டுக்கு 15 நாட்கள் வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி நீர் திறக்க வேண்டும் என்பது நாளையுடன் நிறைவடைய உள்ளது.

பாஜக கூட்டணியில் இருக்க கூடாது என்பதை உணர்ந்து தான் அதிமுக முடிவு எடுத்துள்ளது. அதிமுக கூட்டணி முறிவு, அவர்கள் வீட்டில் நடப்பது, அதைப் பற்றி நாம் கருத்து கூற முடியாது. அதிமுக பாஜக கூட்டணியில் இருக்க வேண்டுமா? இருக்கக்கூடாதா என்பதை அந்த கட்சி தலைவர்கள் உணர வேண்டும். அதிமுகவினர் உணர்ந்துதான் இந்த முடிவை எடுத்திருக்கிறார்கள்” என்றார்.

MUST READ