கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விஷச் சாராயம் குடித்த 37 உயிரிழந்த சம்பவத்திற்கு இதன் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.
கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுக்கப்பட்டுள்ள துரித நடவடிக்கைகளாவன, மாவட்ட எஸ்.பி. சஸ்பெண்ட், மாவட்ட ஆட்சியர் பணியிட மாற்றம், மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல்துறை அலுவலர்கள் கூண்டோடு சஸ்பெண்ட் கள்ளக்குறிச்சி காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர் சஸ்பெண்ட், மேல்நடவடிக்கை எடுக்க வழக்கு CBCID வசம் ஒப்படைப்பு, உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ.10 லட்சமும், சிகிச்சை பெறுபவர்களுக்கு 50,000 ரூபாயும் நிதியுதவி! சிகிச்சை பெறுபவர்களுக்கு தேவையான சிறப்பு சிகிச்சை வழங்க உறுதி செய்ய அறிவுறுத்தல்! மெத்தனால் இருப்பை முழுமையாக அழித்திட நடவடிக்கை! சம்பவம் குறித்து இரண்டு தினங்களில் அறிக்கை வழங்க உத்தரவு, கள்ளக்குறிச்சி சம்பவம் குறித்து விசாரித்து அறிக்கை அளிக்க விசாரணை ஆணையம் அமைப்பு என இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.