spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுதிருவள்ளூர் அருகே தனியார் நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 பேர் பலி - முதலமைச்சர்...

திருவள்ளூர் அருகே தனியார் நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 பேர் பலி – முதலமைச்சர் இரங்கல்!

-

- Advertisement -

'மத்திய அரசு நிதி பாகுபாடு'- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!

திருவள்ளூர் மாவட்டம் காக்களூர் கிராமத்தில் இயங்கி வரும் தனியார் நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 பேர் பலியான சம்பவத்திற்கு முதலமைச்சர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

we-r-hiring

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், திருவள்ளூர் மாவட்டம் மற்றும் வட்டம், காக்களூர் கிராமத்தில் இயங்கிவரும் சிட்கோ தொழிற்பேட்டையில் அமைந்துள்ள ZEN PAINTS என்ற தனியார் நிறுவனத்தில் நேற்று மாலை சுமார் 4.00 மணியளவில் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட தீவிபத்தில். இந்நிறுவனத்தில் பணிபுரிந்துவந்த சென்னை அம்பத்தூர், மேனாம்பேடு கிராமத்தைச் சேர்ந்த திருமதி சுகந்தி (வயது 55) க/பெ.பக்தவச்சலம், திருவள்ளூர் வட்டம், கடம்பத்தூர் கிராமம், பெரிய தெருவைச் சேர்ந்த திரு பார்த்தசாரதி (வயது 51) த/பெ. புவனேந்திரன் மற்றும் சென்னை, அம்பத்தூர். விஜயலட்சுமிபுரம், பிரகாசம் தெருவைச் சேர்ந்த திரு புஷ்கர் (வயது 37) த/பெ.கணேசன் ஆகிய மூன்று தொழிலாளர்கள் தீயில் கருகி உயிரிழந்தனர்.

"நிர்மலா சீதாராமனுக்கு பக்தி இல்லை; பகல் வேஷம்"- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்!

மேலும், இவ்விபத்தின்போது சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த திருவள்ளூர், காந்திபுரம், பெரியகுப்பத்தைச் சேர்ந்த திரு.சீனிவாசன் (வயது 37) த/பெ. இருசப்பன் என்பவர் மீது இந்நிறுவனத்தின் சுவர் இடிந்து மேற்கூரை விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமும், வேதனையும் அடைந்தேன் இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் மேலும், இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குத் தேவையான அரசு நிவாரண உதவிகள் வழங்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

 

 

 

 

 

 

MUST READ