ஏழைகளுக்கும் நடுத்தர மக்களுக்கும் எல்லா சேவைகளும் சென்று சேர வேண்டும்- மு.க.ஸ்டாலின்
சென்னை நந்தம்பாக்கத்தில் ரூ.116 கோடியில் நிதிநுட்ப நகரம் அமைக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். தமிழ்நாடு தொழில்வளர்ச்சி நிறுவனம் சார்பில் அமையும் நிதிநுட்ப நகரம், நிதி நுட்ப கோபுரத்திற்கு அடிக்கல் நாட்டினார்.
அதன்பின் நிகழ்ச்சியில் பேசிய மு.க.ஸ்டாலின், “தமிழ்நாட்டில் முதலீடு செய்ய சர்வதேச நிறுவனங்கள் ஆர்வம் காட்டுகின்றன. தமிழ்நாடு முழுவதும் பரவலாக முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது. சென்னையை தொடர்ந்து கோவை, திருச்சி, மதுரையில் நிதி நிதிநுட்ப நகரம் அமைக்கப்படும், நிதி நுட்பம் தொழில் சூழல் அமைப்பைப் பொறுத்தவரை இந்தியாவுக்கு முன் மாதிரியாக தமிழ்நாடு விளங்குகிறது. 80,000 பேருக்கு வேலைவாய்ப்பு, ரூ.12,000 கோடி முதலீடுகளை ஈர்க்கும் வகையில் நிதிநுட்ப நகரமும், 7,000 பேருக்கு வேலைவாய்ப்பு, ரூ.1000 கோடி மதிப்பிலான முதலீடுகளை ஈர்க்கும் வகையில் நிதிநுட்ப கோபுரமும் அமைக்கப்படுகிறது அமைகிறது.


நாட்டிற்கே முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு வளர்ந்துள்ளது. தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப இளைஞர்களின் திறனை வளர்க்க வேண்டும். 2 ஆண்டுகளாக திமுக அரசு எடுத்த முன்னெடுப்புகளால் தமிழ்நாடு தலைநிமிர்ந்து இருக்கிறது. தொழிற்துறை மிக வேகமாக முன்னேற்றங்களை உருவாக்கித் தந்து வருகிறது. திராவிடமாடல் ஆட்சி பல மாநிலங்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது. ஏழைகளுக்கும் நடுத்தர மக்களுக்கும் எல்லா சேவைகளும் சென்று சேர வேண்டும். கைபேசி மூலம் பண பரிவர்த்தனை மேற்கொள்வது அதிகரித்துள்ளது. டிஜிட்டல் பண பரிவர்த்தனை அதிகரித்துள்ளது” எனக்கூறினார்.


