spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுசாலை விபத்தில் உயிரிழந்த செய்தியாளர் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதியுதவி

சாலை விபத்தில் உயிரிழந்த செய்தியாளர் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதியுதவி

-

- Advertisement -

சாலை விபத்தில் உயிரிழந்த செய்தியாளர் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதியுதவி

திருநெல்வேலி மாவட்டத்தில்‌ சாலைவிபத்தில்‌ உயிரிழந்த தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் குடும்பத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்துள்ளார்.

death

இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாங்குநேரி சுங்கச்சாவடி அருகே நேற்று (23-8-2023) இரவு நடந்த சாலைவிபத்தில்‌, திருநெல்வேலி மாவட்டம்‌, ஆரைகுளம்‌, முன்னீர்பள்ளத்தைச்‌ சேர்ந்த தனியார்‌ தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர்‌ திரு.சங்கர்‌ (வயது 33) என்பவர்‌, சந்திரயான்‌ விண்கலம்‌ தொடர்பான செய்திக்காக திருவனந்தபுரம்‌ சென்று திருநெல்வேலி திரும்பும்‌ வழியில்‌ உயிரிழந்தார்‌ என்ற துயரமான செய்தியினைக்‌ கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்‌.

we-r-hiring
முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற தி.மு.க. உயர்நிலை செயல் திட்டக் குழு கூட்டம்!
Photo: CM MKStalin

மேலும்‌ இவ்விபத்தில்‌ படுகாயமடைந்து மருத்துவமனையில்‌ சிகிச்சை பெற்றுவரும்‌ மூன்று நபர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க அறிவுறுத்தியுள்ளேன்‌. இளம்‌ வயதில்‌ உயிரிழந்த தொலைகாட்சி ஒளிப்பதிவாளர்‌ திரு.சங்கர்‌ அவர்களது குடும்பத்தினருக்கும்‌, உறவினர்களுக்கும்‌ எனது ஆழ்ந்த இரங்கலையும்‌, ஆறுதலையும்‌ தெரிவித்துக்கொள்வதோடு. அவரது குடும்பத்தினருக்கு ஐந்து இலட்சம்‌ ரூபாயும்‌, படுகாயமடைந்து மருத்துவமனையில்‌ சிகிச்சை பெற்றுவரும்‌ மூன்று நபர்களுக்கு தலா ஐம்பதாயிரம்‌ ரூபாயும்‌ முதலமைச்சரின்‌ பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிட உத்தரவிட்டுள்ளேன்‌” எனக் குறிப்பிட்டுள்ளார்.

MUST READ