தற்போது வரை தமிழ்நாட்டில் என்.டி.ஏ. கூட்டணி முழு வடிவம் பெறவில்லை என்று தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார்.
தமிழ் நாட்டில் தற்போது வரை என்.டி.ஏ. கூட்டணி முழு வடிவம் பெறவில்லை என்று தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா கூறியுள்ளாா். சென்னையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லது நடக்கும் வகையில் தேமுதிக நல்ல முடிவை அறிவிக்கும். என்.டி.ஏ.வுடன் இன்னும் பல கட்சிகள் பேசிக்கொண்டு தான் இருக்கின்றன, இறுதியாகவில்லை என்பதுதான் உண்மை. கூட்டணி அமைக்க இன்னும் நேரம் இருக்கிறது; கூட்டணி குறித்து ரகசியமாக எதுவும் பேசவில்லை; நாங்கள் வெளிப்படையாகவே முடிவை அறிவிப்போம். உரிய நேரத்தில் நல்ல முடிவை எடுத்து நிச்சயமாக அறிவிப்போம். தேமுதிக என்ற குழந்தைக்கு ஒரு தாயாக எனது கடமையைச் செய்வேன்”. என்று தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா கூறியுள்ளாா்.
திராவிட மாடல் தொடர மக்கள் முடிவு செய்துவிட்டார்கள் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்


