Homeசெய்திகள்தமிழ்நாடுமஞ்சுவிரட்டு போட்டியில் காளை முட்டி ஒருவர் பலி

மஞ்சுவிரட்டு போட்டியில் காளை முட்டி ஒருவர் பலி

-

- Advertisement -

மஞ்சுவிரட்டு போட்டியில் காளை முட்டி ஒருவர் பலி

புதுக்கோட்டை மாவட்டம் கீழவேகுப்பட்டியில் நடைபெற்ற மஞ்சுவிரட்டு போட்டியில் மாடு முட்டியதில் 40 வயதான சிங்கராவணன் என்பவர் உயிரிழந்தார்.

Jallikattu

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே கீழவேகுபட்டி கிராமத்தில் உள்ள வேகு கண்மாயில் ஏகாளியம்மன், சின்ன கருப்பர் கோயில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு கீழவேகுபட்டி,பி.உசிலம்பட்டி கிராமத்தார்கள் இணைந்து நடத்திய இந்த ஆண்டின் இறுதி மஞ்சுவிரட்டு போட்டி வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. இந்த போட்டியை பொன்னமராவதி வட்டாட்சியர் பிரகாஷ் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்த மஞ்சுவிரட்டில் புதுக்கோட்டை மாவட்டம் மட்டுமன்றி மதுரை, சிவகங்கை, தஞ்சாவூர், திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து வந்திருந்த 600 காளைகளும், 100 காளையர்கள் பங்கேற்றனர். வாடிவாசலில் இருந்து ஒன்றன் பின் ஒன்றாக அவிழ்க்கப்படும் காளைகள் துள்ளி குதித்து சீறிப் பாய்ந்து வருவதை காளையர்கள் மல்லுக்கட்டி தழுவினர். இதில் மஞ்சுவிரட்டு போட்டியில் மாடு முட்டியதில் 40 வயதான சிங்கராவணன் என்பவர் உயிரிழந்தார்.

MUST READ