- Advertisement -
மே 1-ம் தேதி கிராம சபை கூட்டங்களை நடத்த உத்தரவு
தொழிலாளர் தினத்தையொட்டி அனைத்து ஊராட்சிகளிலும் மே 1ம் தேதி கிராம சபை கூட்டங்களை நடத்த மாவட்ட ஆட்சியர்களுக்குத் தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
கிராமசபை கூட்டத்தினை ஊராட்சி எல்லைக்குட்பட்ட வார்டுகளில் சுழற்சி முறையை பின்பற்றி தொழிலாளர் தினமான மே ஒன்றாம் தேதி காலை 11 மணிக்கு நடத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் கிராம சபைக் கூட்டங்கள் மதச்சார்புள்ள எந்தவொரு வளாகத்திலும் நடந்திடக்கூடாது என்றும், கிராம சபை கூட்டங்கள் நடைபெறும் இடத்தை முன்கூட்டியே ஊரக பொதுமக்களுக்கு தெரியப்படுத்திட வேண்டும் என்றும் தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
கூட்டத்தில் பிளாஸ்டிக் பை பயன்பாட்டை முற்றிலும் தவிர்ப்பது தொடர்பாக விவாதிக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு ஆணையிட்டுள்ளது.