spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுகல்வியில் தமிழகத்தை வஞ்சிக்கும் ஒன்றிய அரசை கண்டிக்கிறோம் - பேட்ரிக் ரெய்மாண்ட்

கல்வியில் தமிழகத்தை வஞ்சிக்கும் ஒன்றிய அரசை கண்டிக்கிறோம் – பேட்ரிக் ரெய்மாண்ட்

-

- Advertisement -

கல்வியில் தமிழகத்தை வஞ்சிக்கும் ஒன்றிய அரசை கண்டிக்கிறோம் என தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் பேட்ரிக் ரெய்மாண்ட் தெரிவித்துள்ளார்.

we-r-hiring

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், “தமிழகம் எப்போதும் கல்வியில் சிறந்து தன் சாதனைகளை தொடர்ந்து வருகிறது. ஒன்றிய அரசு தமிழக அரசுக்கு வழங்க வேண்டிய நிதி பங்கீட்டினை உரிய முறையில் வழங்காமல் தொடர்ந்து புறக்கணித்து வருகிறது. தமிழ் மீதும் தமிழர்களின் மீதும ஒன்றிய அரசின் வன்மமும் தமிழர்களின் அரசியல் கலாச்சார தெளிவும் அதற்கு ஒரு காரணம். இந்த நிதிநிலை அறிக்கையிலும் தமிழகம் வஞ்சிக்கப்பட்டு இருக்கிறது.

பள்ளிக்கல்வித் துறையில் தமிழக அரசுககு வழங்க வேண்டிய ஏறக்குறைய 2,000 கோடியினை வழங்காமல், ஏழை குழந்தைகளின் வயிற்றில் அடிக்கும் பணியினை தொடர்ந்து செய்து வருகிறது. இதனால் பகுதி நேர ஆசிரியர்களின் ஊதியம், கல்வி சார்ந்த பல்வேறு திட்டப பணிகள், அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு தமிழக அரசு வழங்க வேண்டிய பல்வேறு நிதி சார்ந்த உரிமைகளை வழங்குவதில் தாமதம் ஏற்படுகிறது . ஒன்றிய அரசு இனியும் காலதாமதம் செய்யாமல் தமிழக அரசுக்கு வழங்க வேண்டிய நிதி பங்களிப்பை உடனடியாக வழங்கிட வேண்டும். கல்வியில் தமிழகத்தை, தமிழர்களை வஞ்சிக்கும் ஒன்றிய அரசை கண்டிக்கிறோம்.

தமிழகம் முழுவதும் ஒவ்வொரு மாவட்டத் தலைநகரங்களிலும் மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்துவதற்கு, தமிழக அரசு மாதிரி பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளிகளில் அனைத்து விதமான போட்டி தேர்வுகளுக்கும் சிறப்பான பயிற்சிகள் வழங்குவதோடு தரமான கட்டமைப்பு, இன்டர்நெட் வசதி தங்குமிடம், ஆகியவற்றுடன் தரமான பயிற்சி அளித்து , அரசு பள்ளி மாணவர்களை பெற்றோர்கள் வழி நடத்துவதை காட்டிலும் உயர் கல்விக்கான வழிகாட்டுதலோடு தமிழக அரசு பராமரித்து வருகிறது.

தமிழகத்தின் கல்வி நிலை உயர்த்துவதற்கு மாநில அரசு அயராத பணியாற்றி வருகிறது. அதனால்தான் அகில இந்திய உயர்கல்விக்கான சேர்க்கையில் அகில இந்திய சதவீதத்தை காட்டிலும் தமிழகத்தினுடைய குறியீடு எப்போதும் முன்னிலை வகிக்கிறது. இந்த திராவிட சித்தாந்தத்தின் ஒருங்கிணைந்த வளர்ச்சியை பொறுத்துக் கொள்ள இயலாத ஒன்றிய அரசு தன்னுடைய சமூக கலாச்சார 100 ஆண்டுகளுக்குப் பிந்தைய சித்தாந்தங்களை தமிழகத்தில் திணிக்க முடியாததும் பாராளுமன்றத் தேர்தலில் கிடைத்த தோல்வியும் மனதில் கொண்டு, தமிழக மக்களை வஞ்சிக்கும் செயலை தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு கண்டிக்கிறது. ஒன்றிய நிதிநிலை அறிக்கையில் தமிழக அரசுக்கு வேண்டிய நிதியை ஒதுக்குவதோடு கல்வித்துறைக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிதியினை உடனடியாக ஒன்றிய அரசு விடுவிக்க வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

MUST READ