Homeசெய்திகள்தமிழ்நாடுபில்லூர் நீரேற்றும் நிலைய பணி- தலைமைச் செயலாளர் ஆய்வு!

பில்லூர் நீரேற்றும் நிலைய பணி- தலைமைச் செயலாளர் ஆய்வு!

-

- Advertisement -

 

பில்லூர் நீரேற்றும் நிலைய பணி- தலைமைச் செயலாளர் ஆய்வு!
TN GOVT

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் பில்லூர் கூட்டுக்குடிநீர் நீரேற்று நிலையத்தின் கட்டுமானப் பணிகளை தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா இ.ஆ.ப. நேரில் ஆய்வுச் செய்தார்.

அதிதீவிரப் புயலாக வலுப்பெற்றது ‘தேஜ்’ புயல்!

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம், நெல்லித்துறை ஊராட்சி, முருகையன் பரிசல்துறை பகுதியில் பில்லூர் கூட்டுக்குடிநீர் திட்டம்-Ill, ரூபாய் 134 கோடி மதிப்பீட்டில் தலைமை நீரேற்றும் நிலையம் கட்டுமான பணிகளையும், பவானி ஆற்றில் அமைக்கப்பட்டுவரும் திருப்பூர் மாநகராட்சியின் நான்காவது கூட்டுக் குடிநீர்; திட்ட நீரேற்று நிலை தடுப்பணை கட்டுமான பணி. கட்டுப்பாட்டுக் கருவி பொருத்தப்பட்ட குழாய் மற்றும் நீர்பின்னேற்றம் தடுப்பு கட்டுப்பாட்டு குழாய் அமைக்கும் பணிகளையும் இன்று (அக்.22) தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா இ.ஆ.ப. நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்தஆய்வின்போது, மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி இ.ஆ.ப. கோவை மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் பவன்குமார் ஜி.கிரியப்பனவர் இ.ஆ.ப., குடிநீர் வடிகால் வாரிய மண்டல தலைமை பொறியாளர் செல்லமுத்து, மண்டல இயக்குநர் (நகராட்சி நிர்வாகம்) இளங்கோவன், மேட்டுப்பாளையம் நகராட்சி நகர்மன்றத் தலைவர் மெஹரிபாபர்வின் அசரப் அலி, துணைத் தலைவர் அருள்வடிவு முனுசாமி, மேட்டுப்பாளையம் நகராட்சி ஆணையாளர் அமுதா ஆகியோர் உடனிருந்தனர்.

கர்பா நடனம் ஆடிய 10 பேர் மாரடைப்பால் உயிரிழப்பு!

கோவை மாநகராட்சிக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் பில்லூர் அணையிலிருந்து குடிநீர் வழங்க பில்லூர்- III திட்டம் 2035- ஆம் ஆண்டு கோவை மாநகராட்சியிலுள்ள மக்கள் தொகையைக் கருத்தில் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் ரூபாய் 779 கோடி மதிப்பில் மேட்டுப்பாளையம், நெல்லித்துறை ஊராட்சி, முருகையன் திட்டம் பரிசல்துறை, மருதூர் ஊராட்சி, தண்டிப்பெருமாள்புரம் மற்றும் கட்டன்மலை ஆகிய இடங்களில் கட்டுமான பணிகள் மற்றும் குடிநீர் குழாய் பதித்தல் போன்ற பணிகள் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ