
கோவை சரக டி.ஐ.ஜி. விஜயகுமார் இ.கா.ப., தனது வீட்டில் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலைச் செய்துக் கொண்டார். இது குறித்து தகவலறிந்து வந்த காவல்துறை உயரதிகாரிகள், விஜயகுமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன், தீவிர விசாரணையும் மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை சரக டி.ஐ.ஜி. துப்பாக்கியால் சுட்டு தற்கொலை!
இந்த நிலையில், கோவை சரக டி.ஐ.ஜி. விஜயகுமாரின் மறைவுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “கோவை சரக காவல்துறை துணைத் தலைவர் விஜயகுமார் இ.கா.ப., இன்று (ஜூலை 07) காலை அகால மரணமடைந்தார் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், வருத்தமும் அடைந்தேன். விஜயகுமார் தனது பணிக்காலத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட பல்வேறு பணிப் பொறுப்புகளில் சிறப்பாகப் பணியாற்றி தமிழ்நாடு காவல்துறைக்கு பெருமைச் சேர்த்தவர். அவருடைய இந்த மரணம் தமிழ்நாடு காவல் துறைக்குப் பேரிழப்பாகும்.
மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு!
அவருடைய குடும்பத்தாருக்கும், காவல்துறையைச் சேர்ந்த நண்பர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.