தமிழ்நாட்டில் தோன்றிய அரிய வகை பட்டாம்பூச்சி
கன்னியாகுமரி மாவட்டம் கோம்பவிளை பகுதியில் தமிழ்நாட்டில் தோன்றிய அரியவகை மலைச்சிறகன் எனும் தமிழ் மறவன் பட்டாம்பூச்சி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தமிழக மலைப்பகுதிகளில் காணப்படும் பட்டாம்பூச்சி இனங்களில் மலைச்சிறகன் எனும் தமிழ் மறவன் பட்டாம்பூச்சியும் ஒன்றாகும். பல்வேறு சிறப்புகள் கொண்ட இதனை 2019 ஆம் ஆண்டு ஜூலை மாதம் தமிழ்நாடு அரசின் சின்னங்களில் ஒன்றாக தமிழ்நாடு அரசு தேர்ந்தெடுத்துள்ளது.
மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடர்களில் வசிக்கும் 32 பட்டாம்பூச்சி இனங்களில் ஒன்றான தமிழ் மறவன்’ பட்டாம்பூச்சி இனம் கூட்டமாக வசிக்கும் இயல்பை உடையது.
வேறு இடங்களுக்கு கூட்டமாகத் தான் செல்லும். அடர் பழுப்பு நிற வெளிப்புற இறகுகளை கொண்ட இவை இறக்கைகளை விரிக்கும் போது ஆரஞ்சு வண்ணத்தில் காட்சி அளிக்கும். தமிழ் மறவன் பட்டாம்பூச்சி என்றால் போர் வீரன் என்று அர்த்தம்.
64 மி.மீ. அகலம் கொண்ட இவை நிழலான மற்றும் ஓடைக்கரை பகுதிகளில் வசிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.