தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை துறை, தேசிய மேலாண்மை துறை சார்பாக பாதுகாப்பு ஒத்திகை
தமிழகத்தில் கடலோர மாவட்டங்களான நாகப்பட்டினம், கடலூர், மயிலாடுதுறை, செங்கல்பட்டு, திருவள்ளூர், ஆகிய ஐந்து மாவட்டங்களில் இயற்கை பேரிடர் காலங்களில் பொது மக்களை எப்படி பத்திரமாக மீட்பது குறித்து பேரிடர் மீட்புக் குழுக்கள் இன்று ஒத்திகை நடந்த நிலையில் அதன் ஒரு பகுதியாக திருவள்ளூர் மாவட்டம் ஆவடி பருத்திப்பட்டு பசுமை பூங்காவில் இன்று காலை 10 மணி அளவில் ஆவடி வருவாய்த்துறை சார்பில் காவல்துறை தீயணைப்பு துறை அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்பு குழுக்கள் இன்று பாதுகாப்பு ஒத்திகை தத்ரூபமாக செய்து காட்டினர்.

குறிப்பாக இந்த பாதுகாப்பு ஒத்திகையில் பொதுமக்களை மீட்கும் பாதுகாப்பு பணியில் அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்பு குழு ஒரு மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டதுபோல், தீயை அனைத்தும், பின்னர் நோயாளிகள் மற்றும் பொதுமக்களை மீட்க அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்பு குழு உடனடியாக வந்து நோயாளிகள் மற்றும் பொதுமக்களை பத்திரமாக மீட்பது போல் தத்ரூபமாக செய்து காட்டினர்.
இதில் மருத்துவமனை மேலிருந்து ரோப் கயிறு கட்டி அதில் பத்திரமாக நோயாளிகளை கீழே இறக்கி அவர்களுக்கு அருகே உள்ள மருத்துவ முகாமில் முதலுதவி அளிக்கப்பட்டு பின்பு நோயாளிகளை சிகிச்சைக்காக, ஆவடி மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அரசு பொது மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் நோயாளிகளை கொண்டு சென்றனர்.
இதனைத் தொடர்ந்து அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்பு குழுபயன்படுத்தும் உபகரணங்கள், தீயணைப்புத்துறை பயன்படுத்தும் உபகரணங்கள், குறித்தும் பொது மக்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை ஆவடி வட்டாட்சியர், மற்றும் ஆவடி மாநகராட்சி ஆணையர், அவர்கள் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது. இந்த பாதுகாப்பு ஒத்திகைப் பணியில், ஆவடி வட்டாட்சியர் அலுவலக அதிகாரிகள், மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
பேட்டி:
மேலும் இது குறித்து மாவட்ட தீயணைப்பு அதிகாரி க.தென்னரசு (DFO) கூறுகையில்,
தமிழ்நாடு அரசு துறை சார்பில் பேரிடர் காலங்களில் தமிழக கடலோரப் பகுதிகளான ஐந்து மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் பேரிடர் பாதுகாப்பு ஒத்திகை இன்று நடைபெற்றது அதன் ஒரு பகுதியாக இன்று ஆவடி படுத்தப்பட்டு பூங்காவில் இந்த போலி ஒத்திகை நடைபெற்றது.
இதில் பல்வேறு துறையைச் சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு பேரிடர் காலங்களில் எவ்வாறு பாதுகாப்பு அளித்தல் போன்றவற்றை செய்து காட்டினார். மருத்துவமனையில் சிக்கிக்கொண்ட 13 நோயாளிகளை பாதுகாப்பாக காப்பாற்றி, முதலில் முதலுதவி அளித்து பின்பு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த நிகழ்வு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு எடுத்தும் வகையிலும் பேரிடர் காலங்களில் தங்களை தற்காத்துக் கொள்வது போன்ற செயல்களை காவல்துறை சார்ந்த அதிகாரிகளும் பேரிடர் மீட்பு குழு அதிகாரிகளும் இந்த போலி ஒத்திகை மூலம் செய்து காண்பித்தனர்.