திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் சித்திரை தேரோட்டம் விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
உலகப்புகழ் பெற்ற கோயிலாகவும், மிகவும் பிரசித்திப் பெற்ற கோயிலாகவும் திகழும் சமயபுரம் மாரியம்மன் கோயிலில் சித்திரை திருவிழா, கடந்த ஏப்ரல் 07- ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதைத் தொடர்ந்து, ஒவ்வொரு நாளும் அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
இந்த நிலையில், விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர். விழாவைக் காண வந்த பக்தர்களுக்கு ஆங்காங்கே அன்னதானம் வழங்கப்பட்டது. தேரோட்ட திருவிழாவை முன்னிட்டு, திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் 1,250 காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
நயினார் நாகேந்திரனுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி!
சமயபுரம் மாரியம்மன் கோயிலின் சித்திரை தேரோட்டம் விழாவால் திருச்சி மாநகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது.