
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சங்கரய்யா (வயது 102) உடல்நலக்குறைவால் காலமானார்.

சஹாரா குழுமத் தலைவர் சுப்ரதா ராய் காலமானார்!
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், சுதந்திரப் போராட்ட வீரருமான சங்கரய்யா, உடல்நலக்குறைவுக் காரணமாக, சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். கடந்த சில நாட்களாக அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
பொதுமக்களின் அஞ்சலிக்காக, சங்கரய்யாவின் உடல் மருத்துவமனையில் இருந்து கொண்டு செல்லப்பட்டு, முதலில் குரோம்பேட்டை இல்லத்திலும், பின்னர் தி.நகர் இல்லத்திலும் வைக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு மரணத் தண்டனை!
சுதந்திரப் போராட்ட வீரர் சங்கரய்யாவுக்கு தமிழக அரசு தகைசால் தமிழர் விருது வழங்கி கௌரவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.