spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஅடிக்கு மேல் அடி! சவுக்கு சங்கர் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு!

அடிக்கு மேல் அடி! சவுக்கு சங்கர் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு!

-

- Advertisement -

முத்துராமலிங்க தேவர் பற்றி அவதூறு கருத்து தெரிவித்ததாக சவுக்கு சங்கர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

we-r-hiring

காவல்துறை அதிகாரிகள் மற்றும் பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசியதாக சவுக்கு இணையதளத்தின் ஆசிரியர் சவுக்கு சங்கர் கடந்த மே 04ம் தேதி காலை கோவை மாநகர சைபர் க்ரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டார். இதையடுத்து சவுக்கு சங்கரை கோவை காவல்துறையினர் கைது செய்து அழைத்துச் சென்றனர். இதனிடையே அவர்கள் வந்த இன்னோவா காரில், தடை செய்யப்பட்ட கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் கடத்தி வரப்பட்டதாக கிடைத்த ரகசிய தகவலில், தேனி வட்டாட்சியர் ராணி முன்னிலையில் சோதனை செய்ததில், 409 கிராம் கஞ்சா மற்றும் 15,500 ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டது. அந்த வழக்கிலும் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டார். இதனிடையே கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் குறித்து சிஎம்டிஏ – வின் போலியான ஆவணங்களை தயாரித்து அவதூறு பரப்பியதாக சவுக்கு சங்கர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதுவரை, அரசுப்பணி செய்ய விடாமல் தடுத்தல், பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் மற்றும் போதைப்பொருள் புழக்கம் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனிடையே சவுக்கு சங்கர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

செந்தில்பாலாஜியை கைது செய்ய வேண்டும்; ஏன் தெரியுமா?
 

இந்த நிலையில், சவுக்கு சங்கர் மீது மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சவுக்கு சங்கர் மீது கோவையில் மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பெலிக்ஸின் யூடியூப் சேனலில், முத்துராமலிங்க தேவர் பற்றி சவுக்கு சங்கர் அவதூறு கருத்து தெரிவித்ததாக வழக்கறிஞர் முத்து என்பவர் கோவை மாநகர பந்தய சாலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த நிலையில், இரு பிரிவினரிடையே கலவரத்தை தூண்டும் வகையில் பேசுதல் உள்ளிட்ட பிரிவுகளில் சவுக்கு சங்கர் மற்றும் பெலிக்ஸ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

MUST READ