சென்னை தலைமைச் செயலகத்திற்கு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது உறுதியாகியுள்ளது.
கங்குவா கிளிம்ப்ஸ் ரெடி… மகனுடன் கண்டு ரசித்த வில்லன் நடிகர்…
சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து, வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய் உதவியுடன் சுமார் இரண்டு மணி நேரம் சோதனையில் ஈடுபட்டனர். ஆனால் வெடிகுண்டு எதுவும் சிக்காததால் அது வதந்தி என்பது தெரிய வந்தது.
மக்கள் மனதை வென்றதா போர்?… ரசிகர்கள் விமர்சனம் இதோ…
இதையடுத்து, வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் பேசிய தொலைபேசி எண்ணை கொண்டு விசாரித்ததில் அவர் கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடியைச் சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது. அவரை கைது செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வெடிகுண்டு மிரட்டல் காரணமாக, தலைமைச் செயலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.