
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் ஆந்திராவைச் சேர்ந்த ஐயப்பப் பக்தர்கள் மற்றும் பாதுகாவலர்கள் இடையே கைக்கலப்பு ஏற்பட்டது. பக்தர்கள் ரத்தக் காயமடைந்ததால் கோயில் நடை சாத்தப்பட்டது.
சூப்பர் ஸ்டார் பிறந்தநாளில் வெளியான கவினின் ‘ஸ்டார்’ பட ஃபர்ஸ்ட் சிங்கிள்!
திருச்சி மாவட்டத்தில் உள்ள புகழ் பெற்ற ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு ஆந்திராவில் இருந்தும் 30- க்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனத்திற்காக வந்திருந்தனர். கருவறைக்கு முன் உள்ள காயத்ரி மண்டபத்தில் சாமி தரிசனம் செய்து, வரிசையில் அவர்கள் நின்றுக் கொண்டிருந்தனர்.
அப்போது, சென்னாராவ் என்ற பக்தருக்கும், கோயில் பாதுகாவலருகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. வாக்குவாதம் முற்றிய நிலையில், பக்தர் சென்னாராவுக்கு ஆதரவாக மற்ற பக்தர்களும், பாதுகாவலருக்கு ஆதரவாக மற்ற பாதுகாவலர்களும் வாக்குவாதத்தில் இறங்கியதால், கைகலப்பாக மாறியது.
இரு தரப்பினரும் கோயிலின் கருவறை அருகிலேயே ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டதில் பக்தர் சென்னாராவ் படுகாயமடைந்து ரத்தம் சொட்ட அமர்ந்திருந்தார். இதனால் பக்தர்கள் அச்சமடைந்துக் கூச்சலிட்டனர்.
தகவலறிந்து வந்த ஸ்ரீரங்கம் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் நிவேதா லட்சுமி, ஆய்வாளர் அரங்கநாதன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று ஆந்திர பக்தர்களை அமைதிப்படுத்தி சாமி தரிசனத்திற்கு அழைத்துச் சென்றனர்.
மாவீரனில் வாய்ஸ் ஓவர் கொடுத்தது விஜய் சேதுபதி…. அப்போ அயலான் பட ஏலியனுக்கு???
கோயில் பாதுகாவலர்கள் மீது ஐயப்ப பக்தர்கள் மூன்று பேர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ள நிலையில், பாதுகாவலர்களும் ஐயப்ப பக்தர்கள் மீது புகார் அளித்துள்ளனர். இது குறித்து ஸ்ரீரங்கம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஸ்ரீரங்கம் கோயிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா இன்று (டிச.12) உற்சவத்துடன் இன்றிரவு தொடங்கும் நிலையில், இந்த நிகழ்வு காரணமாக, கோயில் நடை சாத்தப்பட்டு, பரிகாரப் பூஜைகள் செய்யப்பட்டு கோயில் நடை மீண்டும் திறக்கப்பட்டது.