சென்னை கடற்கரை – தாம்பரம் இடையிலான புறநகர் ரயில் சேவை நாளை காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை இரு திசைகளிலும் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது

சென்னை எழும்பூர் முதல் விழுப்புரம் பிரிவில் உள்ள தாம்பரம் யார்டில் அறிமுகப்படுத்தப்பட உள்ள கேஸ்வே எஃகு கேங்வே கர்டர் தொடங்குதலுக்கான பணிகள் மற்றும் புதிய கால்மேல் பாலம் அமைக்கும் பணிகளானது பல்லாவரம் ரயில் நிலையம் வரை நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக சென்னை கடற்கரை முதல் தாம்பரம் வரை உள்ள புறநகர் ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.
சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் செல்லக்கூடிய புறநகர் ரயில் சேவைகள் நாளை காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை இரு திசைகளிலும் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரத்து செய்யப்பட்டுள்ள ரயில்களுக்கு பதிலாக சென்னை கடற்கரை முதல் பல்லாவரம் வரை காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை சிறப்பு புறநகர் ரயில் சேவைகள் இயக்கப்படுகிறது. இதேபோல், செங்கல்பட்டு முதல் கூடுவாஞ்சேரி இடையே காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை சிறப்பு புறநகர் ரயில்கள் இயக்கப்படும் எனவும், மறுமார்க்கத்தில் காலை 7 மணி முதல் 11 மணி வரை, சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டுக்கு புறநகர் ரயில்கள் இரு திசைகளிலும் அட்டவணைப்படி இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ள ரயில்களின் விவரங்கள்:-
1.ரயில் எண் 66045 தாம்பரத்தில் இருந்து காலை 9.45 மணிக்கு விழுப்புரத்திற்கு புறப்படும் ரயிலானது நாளை முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. 2.ரயில் எண் 66046 விழுப்புத்தில் இருந்து மதியம் 1.40 மணிக்கு தாம்பரம் புறப்படும் ரயிலானது நாளை முழுமையாக ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
பகுதி நேரம் ரத்து செய்யப்பட்டுள்ள ரயில்களின் விவரங்கள்
1.ரயில் எண் 66034 திருவண்ணாமலையில் இருந்து காலை 4.30 மணிக்கு தாம்பரத்திற்கு புறப்படும் ரயிலானது நாளை சென்னை கடற்கரை முதல் தாம்பரம் வரை பகுதி நேரம் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டு்ள்ளது. 2.ரயில் எண் 66055 தாம்பரத்தில் இருந்து நாளை மாலை 6.05 மணிக்கு விழுப்புரத்திற்கு புறப்படும் ரயிலானது நாளை தாம்பரம் முதல் செங்கல்பட்டு வரை இடையே பகுதி நேரம் ரத்து செய்யப்படுகிறது. 3.ரயல் எண் 66056 விழுப்புரத்தில் இருந்து மாலை 5.20 மணிக்கு தாம்பரம் புறப்படும் ரயிலானது நாளை செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் சிறிது நேரம் நிறுத்தப்படும் எனவும் நாளைய தினம் செங்கல்பட்டு முதல் தாம்பரம் இடையே பகுதி நேரம் ரத்து செய்யப்படுகிறது என தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.
நாளை மாலை 4 மணிக்கு பிறகு வழக்கமான ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி புறநகர் ரயில்கள் இயங்கும் எனவும், புதுப்பிக்கப்பட்ட நேரத்தின்படி பயணிகள் தங்கள் பயணத்தைத் திட்டமிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாகவும் தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.