- Advertisement -
திருநங்கை மறுவாழ்வு திட்டத்தை தாலுகா அளவில் அமல்படுத்த தமிழ்நாடு அரசுக்கு ஐகோா்ட் கிளை உத்தரவு வழங்கியுள்ளது.
திருநங்கை இன்னும் நமது சமூகத்தில் புறக்கணிக்கப்பட்டவா்களாகவே உள்ளனா். திருநங்கைகளும் கடவுள்களின் பிள்ளைகள். நமது சமூகமே அவா்களை இன்னும் பின்னுக்கு தள்ளுகிறது என நீதிபதி கே.கே.ராமகிருஷ்ணன் காவல் நிலையத்தில் திருநங்கை ஒருவா் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் தொடா்பான வழக்கில் கருத்தும், வேதனையும் தெரிவித்துள்ளாா்.
மேலும், திருநங்கை தற்கொலை தொடா்பான வீடியோ வெளியிட்டதாக தன் மீது வழக்கு பதிவு செய்தனா் என மனுதாரா் சரத்குமாா் தெரிவித்துள்ளாா்.

வழக்கில் விருதுநகரைச் சோ்ந்த சரத்குமாருக்கு உயா்நீதிமன்ற மதுரை கிளை முன்ஜாமீன் வழங்கியது.
