Homeசெய்திகள்தமிழ்நாடு"தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு வெப்ப அலை நீடிக்கும்"- வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

“தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு வெப்ப அலை நீடிக்கும்”- வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

-

 

கோடைக்கால கடுமையான வெப்பத்தினால் ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்க செய்ய வேண்டியவை!
File Photo

தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு வெப்ப அலை நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

100 நாட்களைக் கடந்த ரஜினியின் ‘வேட்டையன்’ படப்பிடிப்பு!

இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு வெப்ப அலை நீடிக்கும். மேற்குவங்கம், ஒடிஷா, ஜார்க்கண்ட் ஆகிய 3 மாநிலங்களில் வெப்ப அலைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக, ராயல்சீமாவின் நந்தியால் பகுதியில் 114 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகியுள்ளது. மேற்கண்ட மாநிலங்களவை கடும் வெப்ப அலை வீசும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘இந்தியன் 2’ படத்தின் இசை வெளியீட்டு விழா…… இந்த தேதியில் தான்!

கடுமையான வெயில் காரணமாக, பொதுமக்கள் செய்வதறியாது தவித்து வரும் நிலையில், வெப்ப அலை வீசுவதால் கடும் அவதியடைந்துள்ளனர். மேலும், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் அதிகளவு தண்ணீர் பருக வேண்டும், பழச்சாறுகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று மருத்துவரால் அறிவுறுத்தியுள்ளனர்.

MUST READ