spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுசென்னையின் பல்வேறு பகுதிகளில் மழை - மக்கள் மகிழ்ச்சி!

சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழை – மக்கள் மகிழ்ச்சி!

-

- Advertisement -

Rain - மழை

சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்து வருவதால் தற்போது குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது.

we-r-hiring

மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் மற்றும் தென்தமிழக கடலோரப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 கிலோமீட்டர் முதல் 50 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், விருதுநகர், இராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

இந்த நிலையில், சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் காலை முதலே மழை பெய்து வருகிறது. சென்னை சென்ட்ரல், எக்மோர், ராஜாஜி சாலை, பாரிமுனை, மவுண்ட் ரோடு, நந்தனம், சைதாப்பேட்டை, தியாகராய நகர், கிண்டி உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. மழை காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சுழல் நிலவி வருவதால் சென்னை மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

MUST READ