
விஜயதசமி அன்று கல்வியைத் தொடங்கினால், அது வாழ்க்கைகு ஒளியூட்டும் என்பது நம்பிக்கை. அந்த வகையில், விஜயதசமி தினமான இன்று (அக்.24) தமிழகத்தின் திருச்சி, தருமபுரி, ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுடன் ‘வித்யாரம்பம்’ நிகழ்வில் கலந்து கொண்டனர்.

ஹமாஸ் குழுவினரை அழிக்க சிறப்புப் படையை உருவாக்கிய இஸ்ரேல்!
இரண்டு முதல் ஐந்து வரை வயதிலான குழந்தைகளுக்கு ஆசிரியர்கள் முன்னிலையில் தட்டில் நெல் மணிகள் மற்றும் அரிசி நவதானியங்கள் உள்ளிட்டவைப் பரப்பி, அதில் விரல் பிடித்து எழுதிக் காண்பித்தனர். முன்னதாக, குழந்தையுடன் கோயிலுக்கு சென்ற பெற்றோர்கள், குழந்தைகளுக்கு கல்வி அறிவு வேண்டி, சிறப்பு வழிபாடு நடத்தினர்.
விசா இல்லாமல் இனி இலங்கைக்கு செல்லலாம்!
இந்த சிறப்பு வாய்ந்த நாளில் தமிழகம் மற்றும் புதுவையின் பல்வேறு தொடக்கப் பள்ளிகளிலும், ஆரம்பக் கல்விக்கான சேர்க்கை நடைபெற்றது.