- Advertisement -
தவெக மாநாட்டு பாதுகாப்பு பணிக்கு சென்று விபத்தில் சிக்கிய காவலர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
விழுப்புரம் மாவட்டம் மேல்பாதியைச் சேர்ந்த இரண்டாம் நிலை காவலர் சத்தியமூர்த்தி, கடந்த 27-ஆம் தேதி விஜயின் தமிழக வெற்றிக்கழக மாநாட்டு பாதுகாப்பு பணிக்காக இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். சாலை தடுப்பில் இருசக்கர வாகனம் மோதி தலையில் பலத்த காயம் அடைந்து விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனை சிகிச்சை பெற்றார்.
மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் இன்று உயிரிழப்பு.