அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்களும் இனி உயர் கல்விக்கு மாதாமாதம் 1000 ரூபாய் பெறும் வகையில், தமிழ்ப் புதல்வன் திட்டம் ஆகஸ்ட் 9ஆம் தேதி கோவையில் தொடங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கொளத்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது, அவர் பேசியதாவது:
‘’தமிழ்நாட்டில் ரூபாய் 5 ஆயிரம் கோடி வரையிலான கோயில் சொத்துக்களை மீட்டுள்ளோம். தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை அறிவுத் துறையாகவும் செயல்படுகிறது.
அறநிலையத் துறைக்கு உட்பட்ட கல்லூரிகளில் இலவசக் கல்வி வழங்கப்படுகிறது.
ஆகஸ்ட் 9ஆம் தேதி முதல் மாணவர்களுக்கும் 1000 ரூபாய்
தமிழ் புதல்வன் திட்டம் வரும் ஆகஸ்ட் 9ஆம் தேதி முதல் தொடங்கப்படும். கோவையில் இந்தத் திட்டம் தொடங்கப்பட உள்ளது’’.
இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறினார்.