சென்னை எழிலகத்தில் அரசு அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்திய நிலையில், தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார்.
வர்ஷங்களுக்கு ஷேஷம் படத்தின் படப்பிடிப்பு நிறைவு…. ரிலீஸ் எப்போது?
அப்போது அவர் கூறியதாவது, “வெள்ளத்தில் இருந்து மீட்கப்பட்ட நபர்களுடன் முதலமைச்சர் காணொளியில் பேசினார். வெள்ளப் பாதிப்பு தொடர்பாக மூத்த அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்தினார். மின்விநியோகம், மேற்கொள்ள வேண்டிய நிவாரணப் பணிகள் குறித்து முதலமைச்சர் கேட்டறிந்தார். பாதிக்கப்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்ட ஆட்சியர்களுடன் காணொளி வாயிலாக முதலமைச்சர் ஆலோசனை நடத்தினார்.
நிவாரண முகாம்களில் உள்ளவர்களுடன் முதலமைச்சர் பேசி அவர்களின் நிலை குறித்து கேட்டறிந்தார். தூத்துக்குடியில் ஹெலிகாப்டர் மூலம் இதுவரை 27 டன் உணவுப்பொருட்கள் விநியோகிக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.