எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 24 பேரை சிறை பிடித்துள்ளது இலங்கை கடற்படையினர்.
நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்களை 4 நாட்டுப் படகுகளுடன் இலங்கை கடற்படை சிறைபிடித்தது. இதில் கைது செய்யப்பட்ட 24 மீனவர்களையும் இலங்கை காங்கேசன்துறை முகாமில் வைத்து கடற்படை விசாரணை நடத்தி வருகிறது. தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து அழைத்து செல்லும் போக்கு தொடர் கதையாகி வருகிறது.
இவர்கள் இன்று அதிகாலை ராமேஸ்வரம், கச்சத்தீவு மற்றும் நெடுந்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படை, எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி 24 மீனவர்களை கைது செய்தனர். மேலும் அவர்களது நான்கு படகுகளையும் பறிமுதல் செய்தனர். இவர்கள் காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். இது மீனவர்களின் குடும்பத்தினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.