Homeசெய்திகள்தமிழ்நாடு­­­­­அரசு கலை,  அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

­­­­­அரசு கலை,  அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

-

- Advertisement -

­­­­­அரசு கலை,  அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

2023-24-ம் கல்வியாண்டில் தமிழ்நாட்டில் உள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேருவதற்கான விண்ணப்பப்பதிவு கடந்த எட்டாந்தேதி தொடங்கயுள்ளது. மாணவர்கள் www.tngasa.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று கல்லூரி கல்வி இயக்கம் அறிவித்து இருந்துள்ளது.

அரசு கலை,  அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்
கலை, அறிவியல் கல்லூரி

 

மே  பத்தொன்பதாம் தேதியுடன் விண்ணப்பிக்க கால அவகாசம் முடிவடைய இருந்த நிலையில், மே இருபத்திரெண்டு  வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து  இளநிலை படிப்புகளில் சேருவதற்காக மாணவர்கள் விண்ணப்பிக்க இன்று கடைசி தினமாகும். மாணவர்கள் http://tngaasa.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று                                                    தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேருவதற்கான விண்ணப்பப்பதிவு முடிந்ததும், மாணவர்களின் தரவரிசை பட்டியல் அந்தந்த கல்லூரிக்கு நாளைக்கு  அனுப்பி வைக்கப்படும். அதனைத் தொடர்ந்து வருகின்ற இருபத்தைந்தாம் தேதி முதல் இருபத்தொன்பதாம் தேதி வரையில் சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு நடக்க உள்ளது.

அரசு கலை,  அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்
கல்லூரி

பின்னர் வருகின்ற முப்பதாந்தேதி முதல் அடுத்த மாதம் ஜூன் ஒன்பதாந்தேதி வரை முதல் கட்ட பொது கலந்தாய்வும்,  அடுத்த மாதம் பன்னிரெண்டாந்தேதி முதல் இருபதாந்தேதி வரை இரண்டாம் கட்ட பொது கலந்தாய்வும் நடத்தப்பட இருக்கிறது.

கலந்தாய்வு நிறைவு பெற்றதும், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் அடுத்த மாதம் இருபத்திரெண்டாந்தேதி தொடங்கும் என்று கல்லூரிக் கல்வி இயக்கம் ஏற்கெனவே தெரிவித்து இருந்தlast day

government

து குறிப்பிடப்பட்டுள்ளது.

MUST READ