Homeசெய்திகள்தமிழ்நாடுதமிழகத்தில் 3 மாவட்டங்களில் அடுத்த 3 நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் 3 மாவட்டங்களில் அடுத்த 3 நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!

-

மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் 3 மாவட்டங்களில் அடுத்த 3 நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுகளில் வடமேற்கு / மேற்கு திசை காற்று நிலவுகிறது. இதன் காரணமாக இன்று முதல் 30.05.2024 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 31.05.2024 முதல் 02.06.2024 வரை: தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனமழை..!

இந்த நிலையில் தமிழகத்தில் 3 மாவட்டங்களுக்கு அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

MUST READ