சென்னை சென்ட்ரல் -அரக்கோணம் இடையே ரயில் சேவை பாதிப்பு
அரக்கோணம் ரயில்வே யார்டில் தண்டவாளம் பராமரிப்பு மற்றும் பாயிண்ட்ஸ் மாற்றும் பணி காரணமாக விரைவு ரயில்கள், 9 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
அரக்கோணம் ரயில்வே யார்டில் பராமரிப்பு பணிகள் இன்று நடைபெறுவதால் இன்று 23ம் தேதி (புதன்கிழமை) மற்றும் 30-ந்தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை சென்னை சென்ட்ரல் -அரக்கோணம் இடையே இயங்கும் 9 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதேபோல் திருத்தணி மற்றும் அரக்கோணத்திலிருந்து சென்னை சென்ட்ரல் செல்லும் 9 மின்சார ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் பெங்களூரூவிலிருந்து சென்னை சென்ட்ரல் வரை செல்லும் லால்பார்க் ரயில், கோவை இண்டர்சிட்டி, மைசூரூ விரைவு ரயில்கள் காட்பாடி வரை இயக்கப்படுகிறது. இவைகள் பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதற்கு மாற்றாக பயணிகளின் வசதிக்கேற்ப குறிப்பிட்ட தேதிகளில் 9 பயணிகள் சிறப்பு மின்சார ரயில்கள் இயக்கப்பட உள்ளது. அதன்படி இன்று (புதன்கிழமை) மற்றும் 30-ந்தேதியில் சென்னை சென்ட்ரல் புறநகர்- கடம்பத்தூர் இடையே சிறப்பு ரயில்கள் காலை 8.20 மணிக்கும், காலை 11 மணிக்கும் இயக்கப்பட்டது.