Homeசெய்திகள்தமிழ்நாடுஉளுந்தூர்பேட்டையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம்!

உளுந்தூர்பேட்டையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம்!

-

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திமுக கூட்டணியின் சார்பாக விசிக வேட்பாளர் ரவிக்குமாரை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதும் அரசியல் கட்சியினர் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தை பொறுத்தவரையில், திமுக, அதிமுக, பாஜக மற்றும் நாம் தமிழர் கட்சி என நான்கு முனை போட்டி நிலவி வருகிறது. திமுக சார்பில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், வேட்பாளர்களை ஆதரித்து தமிழக முழுவதும் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

இதேபோல் இன்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விழுப்புரம் மக்களவைத் தொகுதியில் கழக கூட்டணி சார்பாக போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர் ரவிக்குமாரை ஆதரித்து உளுந்தூர்பேட்டையில் பானை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். இதில் பேசிய அவர் தமிழ்நாட்டை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்தும் ஒன்றிய பாஜக அரசை ஒட்டுமொத்த இந்தியாவே புறக்கணிக்கும் வகையில், நம் மாண்புமிகு முதலமைச்சர் வழிநடத்தும் #INDIA கூட்டணியை வெற்றி பெறச் செய்வோம் என உரையாற்றினார்.

MUST READ