Homeசெய்திகள்தமிழ்நாடு"வாக்களிக்க முடியவில்லை"- நடிகர் சூரி வேதனை!

“வாக்களிக்க முடியவில்லை”- நடிகர் சூரி வேதனை!

-

 

"வாக்களிக்க முடியவில்லை"- நடிகர் சூரி வேதனை!

“வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாததால், வாக்களிக்க முடியவில்லை” என்று நடிகர் சூரி வேதனை தெரிவித்துள்ளார்.

‘தமிழகத்தில் 51.41% வாக்குகள் பதிவு!’

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் வாக்களிப்பதற்காக, சென்னையில் உள்ள வாக்குச்சாவடிக்கு தனது மனைவியுடன் சென்ற நடிகர் சூரி, வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாததால், வீடு திரும்பியுள்ளார். எனினும், அவரது மனைவி பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்ததால், அவர் மட்டும் தனது வாக்கினை செலுத்தினார்.

“3 முதல் 5 டிகிரி செல்ஸியஸ் வரை வெப்பம் அதிகரிக்க வாய்ப்பு”- வானிலை ஆய்வு மையம் தகவல்!

இது குறித்து சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டுள்ள நடிகர் சூரி, “வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாததால் வாக்களிக்க முடியவில்லை. வாக்குச் செலுத்த முடியாதது மிகுந்த மன வேதனையாக உள்ளது. வேறு வாக்குச்சாவடியிலும் பெயர் உள்ளதா என பார்வையிட்டேன். ஜனநாயகக் கடமை ஆற்ற முடியாதது மிகுந்த வேதனை அளிக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.

MUST READ