Homeசெய்திகள்தமிழ்நாடு"தேசிய விருதுகளைக் குவித்த கவிஞர்....ராஜா கூட்டணிக்கு ஹிட் பாடல்களைக் கொடுத்தவர்"- கவிஞர் வைரமுத்துவின் பிறந்தநாள் இன்று!

“தேசிய விருதுகளைக் குவித்த கவிஞர்….ராஜா கூட்டணிக்கு ஹிட் பாடல்களைக் கொடுத்தவர்”- கவிஞர் வைரமுத்துவின் பிறந்தநாள் இன்று!

-

- Advertisement -

 

vairamuthu

கவிஞர் வைரமுத்துவின் 70-வது பிறந்தநாளையொட்டி, சென்னை பெசன்ட் நகரில் உள்ள அவரது இல்லத்திற்கு சென்ற தி.மு.க.வின் தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், அவருக்கு நேரில் வாழ்த்துத் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து, பல்வேறு தலைவர்களும், திரைப் பிரபலங்களும், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கவிஞர் வைரமுத்துக்கு தொலைபேசி மூலமாகவோ, சமூக வலைத்தளங்கள் மூலமாகவோ வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.

சந்திராயன் 3..விண்ணில் பாய கவுண்ட்டவுன் இன்று தொடங்குகிறது…இஸ்ரோ தகவல்…

கவிஞர் வைரமுத்துவைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்!

மேற்குதொடர்ச்சி மலையின் சில்லுனு சாரல் வீசும் தேனி மாவட்டம், பெரியகுளத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர் கவிஞர் வைரமுத்து. பள்ளியில் படிக்கும் போதே தமிழ் மீது ஏற்பட்ட ஆர்வம் தான், அவரது திறமைகான அங்கீகாரத்தைத் தேடித் தந்தது.

கண்ணதாசன் போன்ற கவிஞர்களின் திரைப்பட பாடல்களால் ஈர்க்கப்பட்ட வைரமுத்துவுக்கு அவர்களை போல தானும் ஒரு கவிஞராக வேண்டும் என்ற வேட்கை எழுந்தது. இதைத் தொடர்ந்து, சினிமாவில் வாய்ப்புத் தேடத் தொடங்கினார்.

அந்த காலக்கட்டத்தில், இளையராஜா மற்றும் பாரதிராஜவின் கூட்டணியில் உருவான திரைப்படங்கள் தொடர்ந்து வெற்றி பெற்று வந்தது. இதையடுத்து, பாரதிராஜாவின் படத்துக்கு தான் முதலில் பாட்டு எழுத வேண்டும் என்று முடிவு செய்த கவிஞர் வைரமுத்து, நிழல்கள் என்ற திரைப்படத்தில் வரும் ‘இது ஒரு பொன்மாலை பொழுது’ என்ற பாடலை எழுதினார்.

இந்த பாடல் சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது மட்டுமின்றி, திரைப்படமும் அமோக வெற்றி பெற்றது. தமிழ் சினிமாவில் சுமார் 40 ஆண்டுகளுக்கு மேலாக பயணித்துக் கொண்டிருக்கும் கவிஞர் வைரமுத்து, 7,500- க்கும் மேற்பட்ட பாடல்களையும், கவிதைகளையும் எழுதியுள்ளார். இசையமைப்பாளர் இளையராஜா மற்றும் பிரபல இயக்குநர் பாரதிராஜா கூட்டணியில் உருவான எண்ணற்ற படங்களுக்கு பல ஹிட் பாடல்களைக் கொடுத்தவர்.

திரைப்பாடல்களைக் கடந்து தமிழாற்றுப்படை, மூன்றாவது உலகப்போர், தண்ணீர் தேசம் உள்ளிட்ட பல புத்தகங்களையும், கவிதைத் தொகுப்புகளையும் எழுதியுள்ளார் கவிஞர் வைரமுத்து.

திருப்பதி கோயிலில் இஸ்ரோ விஞ்ஞானிகள் வழிபாடு!

கடந்த 1981- ஆம் ஆண்டு வெளியான ‘அலைகள் ஓய்வதில்லை’ என்றப் படத்திற்காக, கவிஞர் வைரமுத்துவுக்கு தமிழக அரசின் சிறந்த பாடலாசிரியர் விருது வழங்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து, கடந்த 1990- ஆம் ஆண்டு கலைமாமணி விருதும் தமிழக அரசால் வழங்கபப்ட்டது. கடந்த 1985, 1993, 1994, 1999, 2002, 2010, 2016 ஆகிய ஆண்டுகளில் சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருது வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 2003- ஆம் ஆண்டு இந்திய அரசால் வழங்கப்படும் நாட்டின் நான்காவது உயரிய விருதான பத்மஸ்ரீ விருதை கவிஞர் வைரமுத்துவுக்கு வழங்கி கௌரவித்தது மத்திய அரசு. அதைத் தொடர்ந்து, கடந்த 2014- ஆம் ஆண்டு பத்ம பூஷண் விருதும் வழங்கபப்ட்டது.

முன்பு இளையராஜாவுடனும், பின்னர் ஏ.ஆர்.ரகுமானுடனும் இவர் இணைந்து வழங்கிய பாடல்கள் புகழையும், பல விருதுகளையும் பெறுவதற்கு காரணமாக அமைந்தது.

MUST READ