Homeசெய்திகள்தமிழ்நாடுவடலூரில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்க எதிர்ப்பு!

வடலூரில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்க எதிர்ப்பு!

-

 

வடலூரில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்க எதிர்ப்பு!

வடலூரில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்க எதிர்ப்புத் தெரிவித்து பார்வதிபுரம் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சேலத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம்!

கடலூர் மாவட்டம், வடலூர் சத்திய ஞானசபை முன்பு உள்ள பெருவெளியில் ஆன்மீக சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில், பார்வதிபுரத்தில் கிராம மக்கள் தனமாக வழங்கிய இடத்தில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவிப்பை வெளியிட்டதுடன், அரசாணையையும் வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு அரசின் அறிவிப்புக்கு பார்வதிபுரம் கிராம மக்கள் மற்றும் பா.ம.க. உள்ளிட்ட அரசியல் கட்சிகளும் கடுமையான எதிர்ப்பை பதிவுச் செய்து வருகின்றனர். இந்த சூழலில், கிராம மக்களின் எதிர்ப்பை மீறி, அந்த இடத்தில கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில், அதற்காக தோண்டப்பட்ட குழியில் இறங்கி, அமர்ந்து கிராம மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

விவசாயிகளை கண்டுகொள்ளாத கல் நெஞ்சக்காரர் மோடி – செல்வப்பெருந்தகை!

பள்ளத்தில் இறங்கிப் போராட்டம் செய்தவர்களை காவல்துறையினர் தரதரவென இழுத்துச் சென்று கைது செய்தனர்.

MUST READ