Homeசெய்திகள்தமிழ்நாடுவிக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தேமுதிகவும் போட்டியில்லை - பிரேமலதா அறிவிப்பு!

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தேமுதிகவும் போட்டியில்லை – பிரேமலதா அறிவிப்பு!

-

- Advertisement -

தே.மு.தி.க. வேட்பாளர் பட்டியல் வெளியானது!

விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவித்துள்ளார்.

விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினராக இருந்த புகழேந்தி உடல்நலக்குறைவு காரணமாக ஏப்ரல் 06ம் தேதி உயிரிழந்தார். இதன் காரணமாக விக்கிரவாண்டி தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் வருகிற ஜூலை 10ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஜூலை 13ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவு அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது. இடைத்தேர்தலில் வெற்றி பெற அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். இதுவரை திமுக, பாமக, நாம் தமிழர் கட்சி ஆகியவை தங்களது வேட்பாளர்களை அறிவித்துள்ளனர்.

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என அதிமுக அறிவித்துள்ளது. இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று அறிக்கை வெளியிட்டு விளக்கத்தை தெளிவுபடுத்தினார். இந்த நிலையில், தேமுதிகவும் இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை என அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை தேமுதிகவின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டுள்ளார். நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் அங்கம் வகித்த தேமுதிக இடைத்தேர்தலிலும் அதிமுகவின் முடிவை அங்கீகரித்துள்ளது.

 

MUST READ