வாக்கு எண்ணும் மையங்களை அ.தி.மு.க.வினர் சுழற்சி முறையில் கண்காணிக்க வேண்டும் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.க.வினரை அறிவுறுத்தியுள்ளார்.
உடைக்கு ரூ.2000-க்கு மேல் கிடையாது… நடிகை மிருணாள் தாகூர் பேட்டி…
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “வாக்கு எண்ணும் மையங்களை அ.தி.மு.க.வினர் இரவு, பகல் பாராமல் சுழற்சி முறையில் கண்காணிக்க வேண்டும். எச்சரிக்கையுடனும், விழிப்புணர்வுடனும் 24 மணி நேரமும் மையங்களை அ.தி.மு.க.வினர் கண்காணிக்க வேண்டும். தேர்தல் பணியாற்றிய அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள், முகவர்கள், தொண்டர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். கூட்டணி கட்சிகளின் தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
‘பிரேமலு 2’ படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது!
மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி நாடு முழுவதும் ஒரே கட்டமாக வரும் ஜூன் 04- ஆம் தேதி அன்று நடைபெறவுள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.க.வினரை அறிவுறுத்தியுள்ளார்.