Homeசெய்திகள்தமிழ்நாடுநடந்தது என்ன? ஆளுநர் எழுப்பிய கன்னித்தன்மை பரிசோதனை சர்ச்சையில் டிஜிபி விளக்கம்

நடந்தது என்ன? ஆளுநர் எழுப்பிய கன்னித்தன்மை பரிசோதனை சர்ச்சையில் டிஜிபி விளக்கம்

-

- Advertisement -

நடந்தது என்ன? ஆளுநர் எழுப்பிய கன்னித்தன்மை பரிசோதனை சர்ச்சையில் டிஜிபி விளக்கம்

பள்ளி சிறுமிகளுக்கு கட்டாய கன்னித்தன்மை பரிசோதனை நடந்தது ஏன் என்று முதல்வரிடம் விளக்கம் கேட்ட ஆளுநர் கடிதம் அனுப்பியதாக சொல்ல, தமிழக அரசிடம் விளக்கம் கேட்டிருக்கிறது தேசிய குழந்தைகள் நல ஆணையம். நடந்தது என்ன என்பது குறித்து விளக்கம் அளித்திருக்கிறார் தமிழக டிஜிபி.

ஆறாம் வகுப்பு ஏழாம் வகுப்பு படிக்கும் சிறுமிகளை வலுக்கட்டாயமாக வீட்டில் இருந்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று இரண்டு விரல் பரிசோதனை என்கிற கன்னித்தன்மை பரிசோதனை செய்யப்பட்டிருக்கிறது. இந்த கொடுமைகளால் சிறுமிகள் சிலர் தற்கொலைக்கு முயன்று உள்ளார்கள். இது எல்லாம் என்ன என்று முதல்வருக்கு விளக்கம் கேட்டு கடிதம் எழுதியதாக ஆளுநர் ஆர்.என். ரவி சொன்னது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.

நடந்தது என்ன? ஆளுநர் எழுப்பிய கன்னித்தன்மை பரிசோதனை சர்ச்சையில் டிஜிபி விளக்கம்

இதை அடுத்து தமிழக அரசு இது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தேசிய குழந்தைகள் நல ஆணையம் உத்தரவிட்டிருக்கிறது. தமிழக ஆளுநர் ஆர். என். ரவி ஆங்கில நாளிதழுக்கு அளித்திருந்த பேட்டியில் சொல்லப்பட்டிருந்த விஷயங்கள் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கின்றன. சிதம்பரம் நடராஜர் கோயிலில் பழிவாங்கும் வகையில் சமூக நலத்துறை அதிகாரிகள் பொது தீட்சிதர்கள் மீது நடவடிக்கை எடுத்தார்கள்.

குழந்தை திருமணங்கள் நடப்பதாக எட்டு பேர் மீது புகார் அளித்தனர் . தீட்சிதர்கள் 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைக்கிறார்கள் என்று புகார் கூறினர். ஆனால் அத்தகைய திருமணங்களை நடக்க வில்லை . அது உண்மையும் இல்லை. இதனால் பெற்றோர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

ஆறாம் வகுப்பு, ஏழாம் வகுப்பு படிக்கும் சிறுமிகள் வலுக்கட்டாயமாக வீட்டில் இருந்து மருத்துவமனைக்கு இழுத்துச் சென்று இரு விரல் பரிசோதனை என்கிற கன்னித்தன்மை பரிசோதனை செய்யப்பட்டிருக்கிறது . இத்தகைய கொடுமைகளால் சிறுமிகள் சிலர் தற்கொலைக்கு முயற்சி செய்திருக்கிறார்கள். இதையெல்லாம் பார்த்து இது என்ன என்று முதல்வருக்கு விளக்கம் கேட்டு கடிதம் எழுதினேன் என்று கூறியிருந்தார் ஆளுநர் ஆர். என்.ரவி.

ஆளுநர் அளித்த அந்த பேட்டியின் அடிப்படையில் சிறுமிகளுக்கு கட்டாய கன்னி தன்மை பரிசோதனை மேற்கொண்டதாக சொல்லப்படும் விவகாரத்தில் தேசிய குழந்தைகள் நல ஆணையம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்திருக்கிறது. விசாரணை நடத்தி ஒரு வாரத்திற்கு அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளருக்கு பேசிய குழந்தைகள் நல ஆணையம் உத்தரவிட்டிருக்கிறது.

ஆளுநரின் இந்த குற்றச்சாட்டுக்கு தமிழக டிஜிபி சைலேந்திரபாபு விளக்கம் அளித்திருக்கிறார் . இவை உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டுகள் என்று கூறியிருக்கும் அவர், குழந்தை திருமணம் நடந்ததாக புகார்கள் வந்த நிலையில், அதன் உண்மை தன்மையை கண்டறிந்த பின்னர், அதற்கான ஆதாரங்களை திரட்டி பின்னர் சிதம்பரம் டவுன் காவல் நிலையம் மற்றும் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நான்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. குற்றத்தில் தொடர்புடைய எட்டு ஆண்கள் மூன்று பெண்கள் கைது செய்யப்பட்டனர்.

பாதிக்கப்பட்ட நான்கு சிறுமிகளில் சட்ட ஆலோசகரின் அறிவுரையின்படி இரண்டு சிறுமிகள் மட்டும் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பப்பட்டனர். அந்த சிறுமிகளிடம் பெண் மருத்துவர்கள் மட்டுமே பரிசோதனை நடத்தினர். ஆனால் இருவிரல் கன்னித்தன்மை பரிசோதனைக்கு அவர்களை உட்படுத்தவில்லை. அந்த சிறுமிகள் தற்கொலை செய்ய முயன்றனர் என்பது பொய்யான தகவல். அதுபோன்ற நிகழ்வு நடந்ததாக தகவல் எதுவும் இல்லை என்று தனது விளக்கத்தில் கூறியிருக்கிறார்.

MUST READ