
மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தில் கூடுதல் பயனாளிகளாக 5,401 பேர் இணைக்கப்பட்டு, நடப்பு மாதத்திற்கான தொகை நேரடியாக வங்கியில் வரவு வைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

ஆவடி அரசு மருத்துவமனையில் சுகாதாரத்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி ஆய்வு
கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டம் குறித்து செய்தி வெளியிட்டிருக்கும் தமிழக அரசு, அக்டோபர் மாதத்திற்கான மகளிர் உரிமைத் தொகைப் பயனாளர்களின் வங்கிக் கணக்கில் ஒருநாள் முன்னதாகவே அக்டோபர் 14- ஆம் தேதியே வரவு வைக்கப்பட்டது.
மேல்முறையீடு செய்ததில் தகுதியான பயனாளிகளாகத் தேர்வுச் செய்யப்பட்ட 5,041 பேர் புதிதாக, இந்த திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்றும், ஏற்கனவே அறிவிக்கப்பட்டப் பயனாளிகளின் இறந்தவர்கள், தகுதியற்றவர்கள் என கண்டறியப்பட்ட 8,833 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்றும் தமிழக அரசு குறிப்பிட்டுள்ளது.
ஆவடி அருகே மகன் கண் முன்னே தாய் பலி !
அதன்படி, 1,06,48,406 பேருக்கு ரூபாய் 10,64,84,06,000 உரிமைத் தொகை அவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாகச் சேர்க்கப்பட்டுள்ளது.