spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்வானிலைகடல் சீற்றத்தால் 5,000 மீனவர்கள் மூன்றாவது நாளாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை

கடல் சீற்றத்தால் 5,000 மீனவர்கள் மூன்றாவது நாளாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை

-

- Advertisement -

வேதாரண்யத்தில் 3வது நாளாக கடல் சீற்றம் 5,000 மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.

நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதி மீனவர்கள் வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதால் வேதாரண்யம் பகுதியில் கடல் சீற்றமாக காணப்படுகிறது. கடல் சீற்றத்தால் 5,000 மீனவர்கள் மூன்றாவது நாளாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

we-r-hiring

வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக கடல் பகுதியில் பலத்த காற்று வீச கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அறிவித்துள்ளது. இதனால் வேதாரண்யம் அடுத்த கோடியக்கரை, ஆறுகாட்டுதுறை, புஷ்பவனம் , வெள்ளபள்ளம், மணியன்தீவு உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் 5,000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடல் சீற்றமாக காணப்படுவதால் மூன்றாவது நாளாக மீன் பிடிக்க மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.

கடல் சீற்றமாக காணப்படுவதால் மீனவர்கள் தங்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பைபர் படகுகளை மற்றும் மீன்பிடி வலைகளை கரையிலிருந்து சற்று தொலைவில் பாதுகாப்பாக வைத்துள்ளனர். மீனவர்கள் மூன்று நாட்களாக கடல் சீற்றமாக காணப்படுவதால் மீன்பிடிக்க செல்லமால் வீடுகளிலேயே முடங்கிபோய் உள்னனர். மீனவர்கள் மீன்பிடிக்க செல்லத்தால் சில்லரை மீன் வியாபரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மீனவர்கள் மீன்பிடிக்க செல்லத்தால் கடற்கரை பகுதி வெறிச்சோடி காணப்படுகிறது.

MUST READ