அமெரிக்காவில் சக மானவர்களை காத்த சிறுவன்
அமெரிக்காவில் பள்ளி பேருந்து ஓட்டுநர் திடீரென மயங்கியதால் ஏழாம் வகுப்பு மாணவன் சாமர்த்தியமாக செயல்பட்டு வாகனத்தை நிறுத்தி சக மாணவர்களின் உயிரை காத்திருக்கிறார்.
மிச்சிகனில், ஒரு பெண் ஓட்டுநர் மாணவர்களை பள்ளியிலிருந்து வீட்டிற்கு அழைத்துச் செல்ல பேருந்து ஒன்றை இயக்கி சென்று இருக்கிறார். அப்பேருந்து போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையில் சென்று கொண்டிருந்தபோது ஓட்டுநருக்கு மயக்கம் ஏற்பட்டுள்ளது.
இதை எடுத்து உடனடியாக கட்டுப்பாட்டு அரையை தொடர்பு கொண்டு தனக்கு உடல் நலம் சரியில்லாததை கூறிய ஓட்டுநர் வாகனத்தை சாலையோரம் நிறுத்தவும் முயன்றிருக்கிறார்.
அதற்குள் அப்பெண் மயங்கி சரிகவே வாகனத்தில் இருந்த மாணவர்கள் பயத்தில் அலறியுள்ளனர். இந்நிலையில் கூட்டத்தில் இருந்த ஏழாம் வகுப்பு மாணவன் டில்லன் ரீவ்ஸ் சாமர்த்தியமாக செயல்பட்டு பேருந்தை நிறுத்தி இருக்கிறார்.
பதற்றம் இன்றி நிதானமாக செயல்பட்டு சக மாணவர்களின் உயிரை காப்பாற்றிய சிறுவனுக்கு காவல்துறையினரும் பள்ளி நிர்வாகமும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.