அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் மீது கிரிமினல் வழக்கு பதிவு
அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது நியூயார்க் கிராண்ட் ஜூரி கிரிமினல் வழக்கு பதிவு செய்துள்ள நிலைகள் அவர் விரைவில் கைது செய்யப்படலாம் என தெரிகிறது.
76 வயதான டொனால்ட் டிரம்ப் நடிகையான ஸ்ட்ராமி டேனியல்ஸ் என்பவருடன் நெருக்கமான தொடர்பில் இருந்தார். கடந்த 2016 ஆம் ஆண்டு தேர்தல் நேரத்தில் இந்த விவகாரம் பூதாகரமாக கிளம்பியது. இதை மறைப்பதற்காக நடிகை தேர்தல் பரப்புரை நீதியிலிருந்து டிரம்ப் பணம் கொடுத்ததாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு மான்ஹாட்டன் மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. டிரம்பின் முன்னாள் வழக்கறிஞரான மைக்கேல் கோஹன் இந்த வழக்கில் ட்ரம்பிற்கு எதிராக சாட்சியளித்தார்.
மேலும் நடிகைக்கு பணம் வழங்கியதற்கான ஆதாரமும் கைப்பற்றப்பட்டது. இதை அடிப்படையாகக் கொண்டு டிரம்ப் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் விரைவில் அவர் கைது செய்யப்படலாம் என கூறப்படுகிறது. அமெரிக்க வரலாற்றில் ஒரு முன்னாள் அதிபர் மீது கிரிமினல் வழக்கு எதிர்க்கொள்வது இதுவே முதல் முறை.