Homeசெய்திகள்உலகம்கொலம்பியாவில் கனமழையினால் 2 பேர் உயிரிழப்பு- பயிர்கள் சேதம்

கொலம்பியாவில் கனமழையினால் 2 பேர் உயிரிழப்பு- பயிர்கள் சேதம்

-

கொலம்பியாவில் கனமழையினால 2 பேர் உயிரிழப்பு- பயிர்கள் சேதம் கொலம்பியாவில் தொடர்ந்து கனமழை கொட்டி வருவதால் வெள்ளப்பெருக்கம் ஏற்பட்டுள்ளது. அதனால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமலும், வீடுகளுக்குள் வெள்ளம் சூழ்ந்து இருப்பதாலும் கடுமையாக்க பாதிக்கப்பட்டுள்ளனர் .

குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம் விளைநிலங்களிலும் தேங்கி நிற்கிறது. வெள்ளத்தில் சிக்கிய மக்கள் படகுமூலம் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

மழை மற்றும் வெள்ள பாதிப்பால் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

மேலும் நான்காயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் செய்தி வந்துள்ளது.

கொலம்பியாவில் கனமழையினால 2 பேர் உயிரிழப்பு- பயிர்கள் சேதம்மழையால் வாழை,பப்பாளி உள்ளிட்ட பயிர்கள் கடுமையாக சேதம் அடைந்துள்ளதாகவும் மக்கள் கவலையுடன் தெரிவித்துள்ளனர்.கொலம்பியாவில் மழை தொடரும் என்று அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

MUST READ