Homeசெய்திகள்உலகம்துருக்கியில் இன்று அதிகாலை திடீர் நிலநடுக்கம் - அச்சத்தில் மக்கள்!

துருக்கியில் இன்று அதிகாலை திடீர் நிலநடுக்கம் – அச்சத்தில் மக்கள்!

-

- Advertisement -

ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்- சுனாமி எச்சரிக்கை!

துருக்கியில் இன்று அதிகாலை ஏற்பட்ட திடீர் நிலநடுக்கம் காரணமாக மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்தனர்.

துருக்கி நாட்டில் இன்று அதிகாலை சரியாக 5.19 மணி அளவில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோளில் 5 ஆக பதிவாகியுள்ளதாக ஜெர்மன் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அங்காரா பகுதிக்கு அருகே 10 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது. நிலநடுக்கம் காரணமாக துருக்கியின் பல்வேறு பகுதிகளிலும் கட்டிடங்கள் குலுங்கின. இதனால் அச்சமடைந்த அந்நாட்டு மக்கள் வீடுகளில் இருந்து வெளியேறி வீதிகள் மற்றும் சாலைகளில் தஞ்சமடைந்தனர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்த தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் துருக்கி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் படுகாயம் அடைந்தனர். நிலநடுக்கத்தால் சுமார் ஓன்றை கோடி மக்கள் பாதிக்கப்பட்டனர். 40 லட்சம் கட்டிடங்கள் மற்றும் 20 வீடுகள் சேதமடைந்தன. இந்த நிலையில், இன்று ஏற்பட்ட திடீர் நிலநடுக்கம் அந்நாட்டு மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

MUST READ