
ஹமாஸ் அமைப்பை அழித்து முன்னெப்போதும் இல்லாத வகையில் இந்த போரில் வெற்றி பெறுவோம் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சூளுரைத்துள்ளார்.
மருத்துவக் கல்லூரி மாணவி தற்கொலை வழக்கில் துறைத்தலைவர் கைது!
இஸ்ரேல்- ஹமாஸ் இடையேயான போர் ஒரு வாரத்தைத் தாண்டி நீடித்து வருகிறது. இருதரப்பிலும் 2,000- க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். சுமார் 5,000 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இந்த நிலையில், தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களிடையே உரையாற்றிய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, காசா எல்லைப் பகுதியில் ஊடுருவிய அமைப்பினர், 1,300- க்கும் மேற்பட்ட அப்பாவி மக்களை வெறித்தனமாகக் கொன்று குவித்ததாகவும், காசாவில் வசிக்கும் பாதிக்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற வேண்டும் எனவும் இஸ்ரேல் உத்தரவிட்டுள்ளதாகவும் கூறினார்.
அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் நீட்டிப்பு!
இஸ்ரேலுக்கு சர்வதேச அளவில் ஒத்துழைப்பு இருப்பதாகக் கூறிய அவர், ஹமாஸ் அமைப்பை அழிப்போம் என உறுதிப்படத் தெரிவித்துள்ளார். முன்னெப்போதும் இல்லாத வகையில் வலிமையாக போரை முடிவுக்கு கொண்டு வருவோம் என இஸ்ரேல் பிரதமர், நாட்டு மக்களிடையே சூளுரைத்தார்.