1031. சுழன்றும் ஏர்ப் பின்ன துலகம் அதனால்
உழந்தும் உழவே தலை.
கலைஞர் குறல் விளக்கம் – பல தொழில்களைச் செய்து சுழன்று கொண்டிருக்கும் இந்த உலகம். ஏர்த்தொழிலின் பின்னே தான சுற்ற வேண்டியிருக்கிறது. எனவே எவ்வளவுதான் துன்பம் இருப்பினும் உழவுத் தொழிலே சிறந்தது.

1032. உழுவாா் உலகத்தாா்க் காணியஃ தாற்றா
தெழுவாரை எல்லாம் பொறுத்து
கலைஞர் குறல் விளக்கம் – பல்வேறு தொழில் புரிகின்ற மக்களின் பசி போக்கிடும் தொழிலாக உழவுத் தொழில் இருப்பதால் அதுவே உலக்கதாரைத் தாங்கி நிற்கும் அச்சாணி எனப்படும்.
1033. உழுதுண்டு வாழ்வாரே வாழ்வாா்மற் றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவா்.
கலைஞர் குறல் விளக்கம் – உழுதுண்டு வாழ்பவா்களே உயா்ந்த வாழ்வினா். ஏனென்றால், மற்றவா்கள் அவா்களைத் தொழுதுண்டு வாழ வேண்டியிருக்கிறது.
1034. பலகுடை நீழலும் தங்குடைக்கீழ்க காண்பா்
அலகுடை நீழ லவா்.
கலைஞர் குறல் விளக்கம் – பல அரசுகளின் நிழல்களைத் தமது குடைநிழலின் கீழ் கொண்டு வரும் வலிமை பெற்றவா்கள் உழவா்கள்.
1035. இரவார் இரப்பார்க்கொன் றீவர் கரவாது
கைசெய்தூண் மாலை யவர்
கலைஞர் குறல் விளக்கம் – தாமே தொழில் செய்து ஊதியம் பெற்று உண்ணும் இயல்புடையவர், பிறரிடம் சென்று கையேந்த மாட்டார். தம்மிடம் வேண்டி நின்றவர்க்கும் ஒளிக்காமல் வழங்குவார்.
1036. உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம்
விட்டேமென் பார்க்கும் நிலை.
கலைஞர் குறல் விளக்கம் – எல்லாப் பற்றையும் விட்டுவிட்டதாகக் கூறும் துறவிகள்கூட உழவரின் கையை எதிர்பார்த்துதான் வாழ வேண்டும்.
1037. தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும்
வேண்டாது சாலப் படும்
கலைஞர் குறல் விளக்கம் – ஒருபலம் புழுதி, காற்பலம் ஆகிற அளவுக்குப் பலமுறை உழுதாலே ஒரு பிடி எருவும் தேவையின்றிப் பயிர் செழித்து வளரும்.
1038.ஏரினும் நன்றால் எருவிடுதல் கட்டபின்
நீரினும் நன்றதன் காப்பு
கலைஞர் குறல் விளக்கம் – உழுவதைக் காட்டிலும் உரம் இடுதல் நல்லது; களை எடுப்பதும், நீர் பாய்ச்சுவதும் மிகவும் நல்லது; அதைவிட நல்லது அந்தப் பயிரைப் பாதுகாப்பது.
1039. செல்லான் கிழவன் இருப்பின் நிலம்புலந்
தில்லாளின் ஊடி விடும்
கலைஞர் குறல் விளக்கம் – உழவன் தனது நிலத்தை நாள்தோறும் சென்று கவனிக்காமல் இருந்தால், அவனால் வெறுப்புற்று விலகியிருக்கும் மனைவிபோல அது விளைச்சலின்றிப் போய்விடும்.
1040. இலமென் றசைஇ இருப்பாரைக் காணின்
நிலமென்னும் நல்லாள் நகும்
கலைஞர் குறல் விளக்கம் – வாழ வழியில்லை என்று கூறிக்கொண்டு சோம்பலாய் இருப்பவரைப் பார்த்துப் பூமித்தாய் கேலி புரிவாள்.